புதைகுழிகள்
விடியாத இரவுகள்,
வெளிச்சப்புள்ளிக்கப்பால் வெறுமைகள்,
நீரின்மேல் நுசூற்று வரையும் நிசப்த வளையங்கள்,
மலைகள் வேலியாய் நீண்ட வயல் வெளிகளின்
நடுவே சிக்கிய ஒற்றை மரத்தின் தனிமை.
மனித கூட்டத்தின் மத்தியில் இருந்தும்
இவை சில மறக்காத நினைவுகள்.
சக்கரத்தின் ஒரு கம்பியாய் நானும் சுற்ற,
இனம் புரியா இருட்டு கைகொட்டி சிரிக்கும்.
உள்செல்வது உணரவே வெகுநேரம் பிடிக்க
புதைந்து கொண்டு இருக்கிறோம்.
கண்ணை மூடினால் பிரகாசமாய் தெரியும் கருப்பு புதைகுழிகள்.
சேவியர் சொன்னது,
செப்டம்பர் 1, 2006 இல் 5:23 மு.பகல்
என்ன சொல்ல வறீங்க ? சரியா புரியலை.