ஆதாம் வாழ்கிறான்

ஆகஸ்ட் 29, 2008 at 10:30 பிற்பகல் (ஆதாம் வாழ்கிறான்)

 

பேரூந்தின் நெரிசலில் உரசும்
கால்களிலும் தோள்களிலும்,
நடக்க இடமில்லா
நடைபாதைகளில்
உடை இடை
பாதிகளில்
விளையாடும் கைகளிலும்,
கண்களால் செய்யும்
கற்பழிப்பு
செயல்களிலும்
ஆதாம்
இன்னும்
வாழ்கிறான்.

1 மறுமொழி

  1. rammalar சொன்னது,

    கவிதை நன்றாக உள்ளது.

    ராமநாதன்
    http://rammalar.wordpress.com

மறுமொழியொன்றை வழங்குக