முரண்

அம்மா,
பக்கத்து வீட்டு பையன் கிட்ட
இனிமே
படாம விளையாடுன்னு சொன்ன.
ஏறி இருந்த் பாவாடைய
உன் கண்ணாலயே எறக்கச் செஞ்ச.
பஸ்சில போகையில
எப்பவும்
பக்கத்துலயே ஒக்காரவச்ச.
சாமிக்கு முன்னாடியும்
என்
தாவணிய சரி செஞ்ச.
இப்ப
இந்த மஞ்ச கயிறுதான்
என் வாழ்க்கைன்னு
பால் சொம்ப கையில குடுத்து
பழகாத ஒருத்தனோட
படுக்கைக்கு போக சொல்ற !!