அழகு
பார்த்தால் ஈர்க்கும
அழகான கன்னத்தில்
முத்தம்
பதித்தால் நான் சுவைப்பது
உன்
கன்னங்களைத் தான்!
சிரிப்பால் பிறக்கும்
கன்னக் குழிகளின்
அழகை
விரல் தீண்டினால்
உணர்வது
என்
விரல் நுனிகளைத் தான்!
எட்டி இருந்த என்னை
இழுத்த உன்
இடை அழகு
நான்
கட்டி அணைக்கையில்
கையில்
சிக்காமல் போனது தான்!
இப்படி
தொட்டாலும்
சுவைத்தாலும்
விளங்காத அழகு
என்
பார்வையின் கோளாறா
இல்லை
படைப்பின் கானலா?
***

சேவியர் சொன்னது,
ஆகஸ்ட் 9, 2010 இல் 6:16 மு.பகல்
Eatho solla vareenga….. May not be in the best of your list.