ரோஜா
காதல் அச்சாரங்களாம் இந்த
காம்பில் தவம் செய்யும் ரோஜாக்கள்,
முட்களின் பாதுகாப்பில்
சிறையிருக்கும் ராணிகள்.
பருவம் அடைந்ததும்
பறிக்கப் பெறும் அப்பாவிகள்
பேதையில் துவங்கி பேரிளம்பெண் மட்டும்,
கொண்டை பூட்டில்
சொருகப் பெறும் சாவிகள்.
கல்யாணப் மாலைகளில்
மணம் வீசும் மெல்லினங்கள்,
எரிந்து போகும் சவங்களுக்காய்
இறந்து போகும் உடன்கட்டைகள்.