சிவாஜி விலாஸ்

ஜூன் 30, 2007 at 4:38 மு.பகல் (சிவாஜி விலாஸ்)

சென்னை மத்திய சிறைச்சாலையின் முன் ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க, அதனுள்ளே இருந்த இன்ஸ்பெக்டர், பின்னால் உட்கார்ந்திருந்த சிவாஜியை பார்த்து “ஒரு பத்து இருவது பேர் வெளில இருக்காங்க, நீங்க கையில இருக்கிறதை கொடுத்தீங்கன்னா துணிக்குள்ள வச்சி எடுத்துகிட்டு போக வசதியா இருக்கும்,உள்ள வந்ததும் கொடுத்துடறேன்..”
சிவாஜி தன் கையில் இருந்ததை கொடுக்க, இன்ஸ்பெக்டர் அதை வாங்கி ஒரு துணிக்குள் சுற்றி மூடிக்கொள்கிறார்.சிவாஜி வெளியே இறங்கியதும்,
“தலைவா! எங்க அது .. எங்க அது..” என்று நின்றிருந்த இருபது பேரில் சிலர் கூச்சலிட, அவர்களை விலக்கிக்கொண்டு சிவாஜியை உள்ளே அழைத்து வந்தார், இன்ஸ்பெக்டர். உள்ளே ஒரு செல்லுக்குள் சிவாஜியை அனுப்பி, கதவை பூட்டப்போகும் போது,

“இன்ஷ்பெக்டர் அது…” என்று சிவாஜி கூற,
“சாரி இந்தாங்க” என்று துணியில் சுற்றிக்கொண்டு வந்ததை அவரிடம் தருகிறார். முதுகை காட்டிக்கொண்டு நிற்கும் சிவாஜி அதை வாங்கிக்கொள்ள, இன்ஸ்பெக்டர் இடத்தை விட்டு செல்கிறார்.

பக்கத்து செல்லில் இருந்தவர் சிவாஜியிடம்,
“ஏம்பா என்ன செஞ்சிட்டு உள்ள வந்த ? மர்டரா ?”
“இல்ல,,,”
“ரேப்பா..”
“இல்ல…”
“இன்டர்நெட்ல நீலப்படமா …”
“ஹாஹாஹா… இல்ல…”
“பின்ன என்னதான் செஞ்ச ?”
தன் கையில் இருந்த அந்த துணியை விலக்கி உள்ளே இருந்ததை வெளியே எடுக்கிறார் சிவாஜி,பொன் நிறத்தில் மின்னிகொண்டு நிற்கும் அதை கம்பிகளுக்கிடையே நீட்டி
“முட்ட போண்டா…”
பக்கத்து செல்லில் இருந்தவர் ஒரு நிமிடம் ஆடிப்போய்
“என்னப்பா இது.. எப்பவும் கேள்விபடாததாய் இருக்கே.. உன் கதைய சொல்லு” என்கிறார்.உடனே சிவாஜியின் கண் முன்னே மின்னல்-பின்னால் விரிகிறது (flash back தாங்கோ..)

நிரந்தர பந்தம் கருத்துத் தெரிவிக்கவும்